• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - ஆசிரியர் தலைமறைவு 

இலங்கை

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ள சம்பவம் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல  பாடசாலை ஒன்றில், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் ரீதியில்  9 ஆம் தரத்தைச் சேர்நத மாணவனொருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் தெரிவித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல்  இச்சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இச் சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பாதிக்கப்பட்ட மாணவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விடயம்  தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply