• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது

இலங்கை

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோதனை சாவடியில் இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த பாதுகாப்புத் தரப்பினர் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளும் குறித்த திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply