• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கள்ளக் காதலனுடன் சிக்கிய மனைவி - கணவர் செயலால் பொலிஸார் அதிர்ச்சி! 

இலங்கை

மனைவி கள்ளக்காதலுடன் முச்சக்கர வண்டியில் இருப்பதைக் கண்ட கணவன்,   முச்சக்கர வண்டியை தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹொரனை ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், முச்சக்கர வண்டியை தீ வைத்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

அவருடைய மனைவி, ஹொரனை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்றார்.

இன்று(02) கடமைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து காலை   வெளியேறிய நிலையில் , தன்னுடைய மனைவி மற்றுமொருவருடன் முச்சக்கர வண்டியில் இருப்பதாக கணவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அந்த முச்சக்கர வண்டியை நோக்கி கணவன் ஓடியுள்ளார்.  கணவர் வருவதை கண்ட  காதல் ஜோடி, முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன், முச்சக்கர வண்டிக்கு தீவைத்து கொளுத்தியதில்   ஓட்டோ முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.   

Leave a Reply