நடிகர் ராமராஜனின் பெருந்தன்மை..
சினிமா
விவாகரத்து விஷயமாக கோர்ட்டுக்கு வந்த ராமராஜனிடம் ஒரு நிருபர் உங்கள் திருமணவாழ்கை பற்றியும் நளினி பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டார்
அதற்கு அவர் ,இப்போது நளினி என் மனைவி .அதனால் அவரை பற்றி நான் உங்களிடம் சொல்வது நாகரிகமாக இருக்காது என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்
விவாகரத்து தீர்ப்பாகியது .அன்றைய தினமும் அதே நிருபர் ராமராஜனை வழிமறித்து அதே கேள்வியை கேட்டார் .இப்போதாவது சொல்லுங்களேன் என்று
அதற்கு ராமராஜன் அவர்கள் இப்போது எங்களுக்கிடையே விவகாரத்தாகிவிட்டது .இப்போது அவர் யாரோ ?நான் யாரோ ?அடுத்த பெண்பிள்ளைகளை பற்றி நான் பேசமாட்டேன் அது நன்றாக இருக்காது என்றவாறு நகர்ந்துவிட்டார்
உண்மைக்குமே மனிதருள் மாணிக்கம் நம் ராமராஜன் என்ற கிராம நாயகன் .