• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரிய வகை கடலாமை மீட்பு

இலங்கை

மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட அரிய வகை கடலாமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, நேற்றைய தினம் மன்னார் – சௌத்பார் பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த கடல் ஆமை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது, சுமார் 150 கிலோகிராம் எடை கொண்ட, அரிய வகை கடலாமை வகையைச் சேர்ந்தது என குறிப்பிடப்படுகின்றது. சம்பவம் தொடர்பில், வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட கடலாமை பாதுகாக்கப்பட்டு வருவதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
 

Leave a Reply