• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெலன்ஸ்கி சொந்த ஊர் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் - 6 பேர் பலி

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் ராணுவம் ரஷியாவின் மாஸ்கோ நகர் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் அமைந்துள்ள அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்த மறுநாளில் ரஷிய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply