• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளைஞனை நிர்வாணமாக்கி கொள்ளையடித்த ஆண்

இலங்கை

புளத்சிங்களவில் இளைஞன் ஒருவனின் ஆடையை கழற்றி அவனை முழுமையாக நிர்வாணமாக்கி அணிந்திருந்த தங்க நகையை அபகரித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

18 வயதான இளைஞன் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மாலையே இவ்வாறு அபகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த அவ் இளைஞன் மாலை நேர தனியார் வகுப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் சனிக்கிழமை (29) காத்திருந்துள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தான் பொலிஸ் அதிகாரி எனவும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அவ்விளைஞனை ஏற்றியுள்ளார்.

அவர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு செலுத்தாது இறப்பர் தோட்டத்துக்கு செலுத்தியுள்ளார்.

அங்கு வைத்து இளைஞனை அச்சுறுத்தி ஆடைகளை கழற்றி கைகளை கட்டிவிட்டு அவர் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞன் தனக்கு நேர்ந்ததை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததன் பின்னர் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply