• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்தவர்  கைது

இலங்கை

யாழில் சுதுமலை அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், வைரவர் கோயில் என நான்கு கோயிகளில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் 35 வயதான  நபரொருவரை மானிப்பாய் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

ஆலயங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவின் உதவியுடன் குறித்த நபரை பொலிஸார் நேற்றைய தினம் யாழ் நகரில் வைத்துக்  கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும், அவரிடம் இருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்து நபர் அண்மையில் தான் ஆலய உண்டியல்களை உடைத்துத்  திருடிய குற்றச்சாட்டில்   3 மாத கால சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டு  விடுதலையாகியிருந்தார் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply