• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல்

இலங்கை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இந்த வாரம் நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரைவில் விவாதம் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply