• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத கஞ்சா பாவனை அதிகரிப்பு - ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை

இலங்கை

இலங்கையில் சட்டவிரோத கஞ்சா பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் சட்டவிரோத கஞ்சா பாவனையாளர்களின் எண்ணிக்கை 300,000 இலிருந்து 350,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது நாட்டில் புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக உள்ளதாக சபையின் தலைவர்தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசிய மருந்துக் கொள்கையை உருவாக்குவதற்கான முக்கியமான கலந்துரையாடல் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply