• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே நாளில் அடித்த மிகபெரும் அதிர்ஷ்டம் - கோடீஸ்வரியான பெண்

அவுஸ்திரேலியாவில் குளிர்சாத பெட்டியின் கதவில் சிக்கியிருந்த லொட்டரி சீட்டினால் பெண் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி சிட்னி நகரில் வசிக்கும் குறித்த பெண், லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இருப்பினும், அந்த லொட்டரி சீட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் பெண்ணின் சமையலறையின் குளிர்சாதனப் பேட்டியின் கதவில் சிக்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கபட்டது.

இதனையடுத்து, குறித்த லொட்டரி சீட்டில் 2 மில்லியன் டொலர் பரிசுத்தொகை இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும் பரிசை பெற்றுக்கொண்ட பெண், அடமானத்தில் இருக்கும் தமது வீட்டை மீட்கவும், எஞ்சிய தொகையினை தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply