• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கமலால் அம்மா நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்

சினிமா

உலக நாயகன் கமலின் படங்களில் நடிகைகளிடம் நெருக்கமான காட்சிகள் இருப்பது அப்போது சர்வ சாதாரணம் தான். ஆகையால் சில நடிகைகள் கமல் படம் என்றாலே தவிர்த்தும் இருக்கிறார்கள். ஆனாலும் பல நடிகைகள் கமலுடன் ஒரு படத்திலாவது நடித்திட வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணியதும் உண்டு.
  
இந்நிலையில் கமல் பல நடிகைகளுடன் நெருக்கமான காட்சியில் நடித்ததால் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலிருந்து கமலுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் அதில் லிப் லாக் போன்ற சில காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

நடிகைக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் முதல் படம் என்பதால் வேறு எதுவும் சொல்ல முடியாமல் நடித்து இருக்கிறார். தற்போது சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசி இருந்தார். அதாவது இப்போது அம்மா நடிகை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான்.

டாப் ஹீரோக்கள் பலரது படங்களில் அம்மாவாக நடித்து விட்டார். எமோஷனல், காமெடி என எது கொடுத்தாலும் சரண்யா பொன்வண்ணன் பட்டையை கிளப்பி விடுவார். இந்நிலையில் கமலின் நாயகன் படத்தின் மூலம் தான் இவர் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் சரண்யா பொன்மணியனின் உதட்டை கமல் ருசித்ததாக பயில்வான் கூறியிருக்கிறார்.

மேலும் அதன் பிறகு ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த சரண்யா சின்னத்திரை நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஒரு வருடத்திலேயே இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வர அதன் பிறகு இயக்குனர் மற்றும் நடிகருமான பொன்வண்ணனை மணந்து கொண்டார்.

மேலும் முதல் படத்தில் தான் இது போன்ற மோசமான காட்சியில் நடித்தாலும் அதன் பிறகு நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே சரண்யா பொன்வண்ணன் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு முக்கிய இடமும் இருக்கிறது. இப்போதும் தனது மார்க்கெட்டை இவர் தக்க வைத்து உள்ளார். 
 

Leave a Reply