• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன் பிறந்த தினம் ஜூலை 28  1907.

சினிமா

ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் , (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 சூலை 1907–12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர்
வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)  . தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில வாழ்க்கை , நாம் இருவர் , சர்வர் சுந்தரம் , மேஜர் சந்திரகாந்த் , சிறீ வள்ளி, களத்தூர் கண்ணம்மா ஆகியன.
இளம்பருவம்
மெய்யப்பர் காரைக்குடியில் வாழும்
நகரத்துச் செட்டியார் குடும்பத்தில், ஆவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் ஜீலை, 28, 1907. ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.  இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர். தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார். தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.
திரைத்துறையில் தொடக்கக் காலம்
டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான அல்லி அருச்சுனா என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.  1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.
நந்தக் குமார் என்ற இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார். இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.  1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார். அதே ஆண்டில்,
பூகைலாசு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் கன்னட மொழி நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட
சபாபதி , போலி பாஞ்சாலி , என் மனைவி ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான
அரிச்சந்திரன் பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.
ஏவியெம் புரொடக்சன்சு
ஏவிஎம் நிறுவன முத்திரை
நவம்பர் 14 , 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) சென்னையின்
சாந்தோமில் நிறுவினார்.
கோடம்பாக்கத்தில் இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை காரைக்குடியில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் வேதாள உலகம் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, நாம் இருவர் என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார். இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது. [9] இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார்.  25 வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் ஜீவிதம் என்ற பெயரில் தெலுங்கிலும் , பகர் என்ற பெயரில்
இந்தியிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம்,
வங்காளம் , சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.
1950களில்
1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்) பராசக்தி திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. மு. கருணாநிதியால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான சிவாஜி கணேசன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.  தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார்.  ஏவிஎம் வெளியிட்ட அந்த நாள் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன. இதில் இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவிய
யப்பானியருடன் சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், அகிரா குரோசவாவின் ரசோமோன் என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில்,
சடகபாலா என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான சடகபாலம் என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது. 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் பூகைலாசு என்ற திரைப்படம் வெளியானது. இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை பக்த ராவணா எனத் தமிழிலும், பக்தி மகிமா என இந்தியிலும் வெளியிட்டனர்.
1960கள்
1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார். ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன. இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, எம். ஜி. ஆர் நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது.
இந்தித் திரைப்படங்கள்

திரைத்துறையில் இணைந்ததிலிருந்து பல வட இந்திய இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1938 இல் வெளியான நந்தகுமார் என்னும் திரைப்படம் மராத்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் இந்தித் திரைத்துறையில் நுழைந்தார். பகார் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இதில் வைசெயந்திமாலா, கரன் திவான், பண்டரி பாய், பிரான், ஓம் பிரகாசு, டபசும் நடித்திருந்தனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தைத் தழுவி வெளியானது. இது வைசெயந்திமாலாவின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டில், வைசெயந்தி மாலாவின் நடிப்பில் லட்கி என்னும் இந்தித் திரைப்படத்தைத் தயாரித்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. 1957 ஆம் ஆண்டில், அம் பஞ்சி ஏக் தால் கி என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருந்ததால், பிரதமர் தங்கப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். தமிழ்த் திரைப்படமான மிச்சியம்மா இந்தியில் பாய் பாய் என்று வெளியானது. இது மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலுக்காக நன்கு அறியப்படுகிறது. பாபி என்னும் திரைப்படத்தில் ஜக்தீப், பண்டரி பாய், பால்ராஜ் சஹ்னி, நந்தா ஆகியோரும் நடித்தனர். இந்தித் திரைப்படங்களான மிஸ் மேரி, பக்தி மகிமா, பக்த் பிரக்லாத் ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை மொழிமாற்றி எடுக்கப்பட்டவை. 1961 ஆம் ஆண்டில் நிருபா ராய்க்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. ஏவியெம் தயாரித்த பிற இந்தித் திரைப்படங்களுள் சில: மன் மௌஜி, மெயின் சூப் ரகுங்கி, பூஜா கே பூல், மெக்ர்பான். மெய்யப்பரின் கடைசி இந்தித் திரைப்படமான ஜைசே கோ தைசா, 1973 ஆம் ஆண்டு கிருசுணா- பஞ்சு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது
ஏவி.எம். அறக்கட்டளை
மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது.
கட்டிடங்கள்
இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர்.
கல்வி நிறுவனங்கள்
இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.
அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு
1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள்
சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவு, அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இது சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
கம்பராமாயணத்தை ஆராய்ந்து வல்லுநர் ஒருவர் இந்நாளில் சொற்பொழிவாற்றுவார். அச்சொற்பொழிவு வானதி பதிப்பகத்தால் நூலாக்கப்பட்டு ஆகத்து மாத நடுவில் நடைபெறும் சென்னை கம்பன் கழக விழாவில் வெளியிடப்படும். அவ்வகையில் இதுவரை ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள்:
வ.எண் ஆண்டு தலைப்பு சொற்பொழ
1 1984
2 1985 மூன்று வினாகள்
மு. மு. இஸ்மாயில்
3 1986 கம்ப சூத்திரம் எஸ் ராமகிரு
4 1987
5 1988
6 1989
7 1990
கம்பனின் அரசியல் கோட்பாடு
அப்துல் ரக
8 1991
9 1992
10 1993 கம்பர் முப்பால்
ம. ரா. போ. குருசாமி
11 1994
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
தவத்திரு குன்றக்குட அடிகளார்
12 1995
13 1996
14 1997 கம்பனும் கீதையும்
இளம்பிறை மணிமாற
15 1998
16 1999
17 2000
18 2001
கம்பன் நேற்று - இன்று - நாளை
சுகி. சிவ
19 2002
20 2003
21 2004
22 2005
23 2006
24 2007
25 2008
26 2009
27 2010
கணினி யுகத்திற்குக் கம்பர்
முனைவர் மோகன்
28 2011
29 2012 கம்பன் பிறந்த தமிழ்நாடு
பேராசிரி
சரஸ்வதி ராமநாதன்
30 2013
இறுதிக்காலம்
மெய்யப்பரின் உடல்நலம் குன்றியதால் திரைப்படத் தயாரிப்புகள் குறைந்தன. 1970களில் குறைவான திரைப்படங்களே வெளியாயின. மேலும், இவரது குடும்பத்தினர் சமூகத் தொண்டில் ஈடுபட்டனர். இவ்வாண்டுகளில் நான்கு திரைப்படங்களை வெளியிட்டனர். பொம்ம பொருசா, தில் கா ராசா, அக்கா தமுடு, சைசே கோ தைசா ஆகிய திரைப்படங்களில் பொம்ம பொருசா, தில் கா ராசா ஆகியன ஓரளவு வெற்றியடைந்தன. கிருசுணன் - பஞ்சு ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் அக்கா தமுடு என்ற வெற்றித் திரைப்படமும் வெளியானது. ஏவியெம் இயக்கி செயலலிதா நடித்த ஒரே தெலுங்குத் திரைப்படம் இதுவே. 1973 இல் மெய்யப்பர் தன் கடைசித் திரைப்படத்தை சிதேந்திரா என்றவரின் முன்னணி நடிப்பில் வெளியான சைசே கோ தைசா என்ற இந்தித் திரைப்படத்தை வெளியிட்டார். பின்னர் தன் சமூகத் தொண்டையும் வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டார். மெய்யப்பர் தன் 72 ஆவது அகவையில் ஆகத்து 12, 1979 அன்று இறந்தார். இவரது கடைசி விருப்பத்திற்கேற்ப, இவரது மகனின் பெயரில் ஏவியெம் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட்டது.
சிறப்புகள்
இவரது நாற்பது ஆண்டு காலத் திரை வரலாற்றில் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவற்றில் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திவர், இந்தியாவின் முதல் மொழிமாற்றத் திரைப்படத்தைத் தயாரித்தவர் போன்ற பெருமைகளைப் பெற்றவர். தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்களுடனும் திரைத்துறையில் பணியாற்றிய பெருமையும் இவரையே சாரும். நாம் இருவர் திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை எழுதினார். பராசக்தி திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதினார். அன்பே வா திரைப்படத்தில் எம். ஜி. ஆரும், மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் செயலலிதாவும் நடித்திருந்தனர். இவரது திரைத்துறைப் பணிக்காலத்தில் டி.ஆர். மகாலிங்கம், வைஜெயந்திமாலா, சிவாஜி கணேசன், கமல்காசன், மேஜர் சந்திரகாந்து ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவரது வெற்றிகளிலேயே பெரியது இவரது பெரிய தொழிற்கூடங்கள் தான். திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை நிர்வகித்து சாதனை புரிந்துள்ளார். ஏவியெம் நிறுவனம் மூன்று தலைமுறைகளாக வெற்றித் திரைப்படங்களை வழங்குகிறது. மெய்யப்பரின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன்களான பாலசுப்பிரமணியம், சரவணன் ஆகியோர் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புன்னாமி நாகு (சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம்), முரட்டுக் காளை (ரசினிகாந்திற்கு வெற்றியளித்த திரைப்படம்), சம்சாரம் அது மின்சாரம், மின்சாரக் கனவு, ஜெமினி, பேரழகன் ஆகியன குறிப்பிடத் தகுந்த திரைப்படங்கள். மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டில் சிவாஜி திரைப்படம் வெளியானது. ஏறத்தாழ 77 கோடியில் உருவான இத்திரைப்படமே தமிழ்த் திரைத்துறையின் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். தற்காலத்தில் அதிக தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். சரவணின் மகன் குகன், பாலசுப்பிரமணியத்தின் மகன் குருநாத் ஆகியோரும் திரைத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். 1955 இல், அம் பஞ்சி ஏக் தல் கே திரைப்படத்தில் நடித்ததற்காக பிரதமர் மெய்யப்பருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார். 2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவர் நினைவாக
அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. மெய்யப்பரின் 24 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், இவர் நினைவாக குறுவட்டுகள் வெளியிட்டது. அவரது இளமைக்காலத்தில் தொடங்கி, திரைத்துறை வரலாறு முழுமையும் குறுவட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2006, யூலை 30 இல், மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தென்னிந்தியத் திரைத்துறை வளாகத்தில், அன்றைய முதல்வர் மு. கருணாநிதி , மெய்யப்பரின் சிலையைத் திறந்துவைத்தார்.
அவிச்சி மெய்யப்ப செட்டியார் 28-7-1907ல் பிறந்தவர்.A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி.பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர்.
சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என நான்கு மொழிகளிலும் படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமாய் திகழ்கிறது.
காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை ஆரம்பித்தார்.பின் அதையே சரஸ்வதி சவுண்ட் புரடக்க்ஷன்ஸ் கம்பெனி ஆக்கி அல்லி அர்ஜுனா,பூகைலாஷ்,ரத்னாவளி ஆகிய படங்களை எடுத்தார்.அவை எல்லாம் தோல்வியடைந்தன.
பின் இன்று மந்தைவெளியில் சன் டி.வி.உள்ள இடத்தில்..பிரகதி ஸ்டூடியோ ஆரம்பித்தார்.என் மனைவி,ஹரிசந்திரா,ஸ்ரீவள்ளி ஆகிய படங்கள் எடுத்தார்.1941ல் சபாபதி என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,காளி என்.ரத்தினம் நடித்த இந்த படம்..இன்றும் டி.வி.,யில் ஒளி பரப்பப்படும் போது பெரும் ஆதரவை பெறுகிறது.நல்ல நகைச்சுவை படம்.
பின் 1945ல் ஏ.வி.எம்., ஸடூடியோ பிறந்தது.காரைக்குடிக்கு ஸ்டூடியோ இரண்டாம் உலகப் போர் போது மாற்றப்பட்டு..பின் மீண்டும் வடபழனியில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றபட்டது.
1947ல் நாம் இருவர்,1948ல் வேதாள உலகம்,1949ல் வைஜயந்திமாலா அறிமுகத்துடன் வாழ்க்கை ஆகிய படங்கள் வெளியாயின. வாழ்க்கை தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பாஹர் என்றும் வந்து வெற்றி பெற்றது.
அதற்கு பின் பிரபல தயாரிப்பு நிறுவனமாகி..பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம்.,
குறிப்பாக பராசக்தி (சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., அறிமுகம்)அந்த நாள்,களத்தூர் கண்ணம்மா (கமல் அறிமுகம்),அன்னை, அன்பே வா, சர்வர் சுந்தரம் என வெற்றி தொடர்ந்தது.
ஏ.வி.எம்., 1979 ல் அமரரானார்.
பின்னர்..அவரது குமாரர்கள் இன்றுவரை வெற்றிகரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 174 படங்களை ஏ.வி.எம்.தயாரித்துள்ளது.
ஏ.வி.மெய்யப்பன் இயக்குநர் என்பதை விட திறமைசாலிகளைக் கொண்டு வெற்றி படங்களை அளித்த சிறந்த வியாபாரி எனலாம்.
ஏ வி எம் நிறுவனத்தின் நிறுவனரான திரு ஏ வி மெய்யப்பன் 1934 ஆம் ஆண்டு முதலே திரைப்படத் துறையில் இருந்தாலும் இன்றைய சாந்தோம் பகுதி மற்றும் மைலாப்பூரில் 60, தெற்குத் தெரு என்ற முகவரியில் அவர் ஏ வி எம் நிறுவனத்தை துவங்கியது 1945 ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிதான்.
சென்னையில் இயங்க ஆரம்பித்த ஏ வி எம் ஸ்டுடியோ மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடிக்கு மாற்றப்பட்டு அங்கே செயல்பட்டு, நாம் இருவர் படத்தை தயாரித்து 14.01.1947- ல் வெளியிட்டார் மெய்யப்பன். இந்தப் படத்தில் முதன் முதலாக பாரதியார் பாடல்கள் உரிமை பெற்று பயன்படுத்தியதோடு , பின்னர் அவற்றை நாட்டுடமையாகவும் ஆக்கினார். 1948 ஆண்டு வேதாள உலகத்தை வெளியிட்டு விட்டு ஸ்டுடியோவை சென்னைக்கு கொண்டு வந்தார்.
1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சென்னை ஏ வி எம் ஸ்டுடியோ நிறுவனம் காலமாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்துக் கொண்டு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி, பெங்காலி , சிங்களம் ஆகிய மொழிகளில் 175 படங்களுக்கு மேல் தயாரித்து உள்ளது. இவற்றுள் நாம் இருவர் , வேதாள உலகம், சபாபதி , ஸ்ரீவள்ளி , வாழ்க்கை (3 மொழிகள்) ஆகிய படங்களை மெய்யப்பனே இயக்கி இருந்தார் . இவர் தயாரித்த பக்த பிரகலாதா படம் தமிழ், தெலுங்கு , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது
ஏவி எம் நிறுவனம் தயாரித்த ஹம்பஞ்சி ஏக் டால்கே என்ற இந்திப்படம் 1957 ஆம் ஆண்டு சிறந்த குழந்தைகள் படத்துக்கான பிரதமரின் தங்க மெடலைப் பெற்று, நேருவால் பாராட்டப்பட்டது . ராஜ் கபூர் நர்கீஸ் நடித்த சோரி சோரி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஷங்கர் ஜெய்கிஷனுக்கு பெற்றுத் தந்தது. அந்த நாள் , பாவ மன்னிப்பு, தெய்வப்பிறவி , சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்கான மத்திய அரசின் சான்றிதழ் பெற்றன
அன்னை , நானும் ஒரு பெண் , குழந்தையும் தெய்வமும் , ராமு ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் பெற்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125 ஆவது படமான உயர்ந்த மனிதனுக்கு தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது மட்டுமின்றி ”பால் போலவே..” பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பி.சுசீலாவுக்கு பெற்றுத் தந்தது.
சம்சாரம் அது மின்சாரம் சிறந்த ஜனரஞ்சக படத்துக்கான மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்றது. மின்சாரக் கனவு படம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ ஆர் ரகுமானுக்கும் , சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை சித்ராவுக்கும் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை பிரபு தேவாவுக்கும் பெற்றுத் தந்தது.
இப்படி விருதுகள் ஒரு பக்கம் இருக்க… பல தொழில் நுட்ப விஷயங்களுக்கும் முன்னோடியாக இருந்துள்ளது ஏ வி எம் நிறுவனம்.
பின்னணி பாடுவது (play back singing), பின்னணிக் குரல் பேசுவது (dubbing) போன்றவற்றை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான் . 1937 ஆம் ஆண்டு ஏ வி எம் தயாரித்த நந்தகுமார் படத்தில் பின்னணி பாடிய லலிதா வெங்கட் ராமன்தான் இந்தியாவின் முதல் பின்னணிப் பாடகி. 1938 கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட ஹரிச்சந்திரா படமே இந்தியாவின் முதல் டப்பிங் படம்.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரோடு சேர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்தது ஏ வி எம் தான் .
சிவாஜி கணேசன் மட்டுமல்லாது எஸ் எஸ் ராஜேந்திரன் (பராசக்தி), டி ஆர் மகாலிங்கம் (நந்தகுமார் — ஸ்ரீவள்ளி) கலைஞானி கமல்ஹாசன் (களத்தூர் கண்ணம்மா) , வைஜயந்தி மாலா (வாழ்க்கை), சிவகுமார் (காக்கும் கரங்கள்), ஓர் இரவு (நாகேஸ்வரராவ்), வி.கே.ராமசாமி (பராசக்தி), விஜயகுமாரி மற்றும் ராஜ கோபால் (குலதெய்வம்) ஏ வி எம் ராஜன் , புஷ்பலதா , கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் (பேடர கண்ணப்பா) பண்டரி பாய், மைனாவதி முதலிய நடிக நடிகையரையும்…..
ஏ டி கிருஷ்ணசாமி, எம் வி ராமன், ப.நீலகண்டன் , கே .சங்கர் , திரு .பீம்சிங், ஏ.சி.திருலோகச்சந்தர், எஸ் பி முத்துராமன் , ராம.நாராயணன், ராஜ சேகர் போன்ற இயக்குனர்களையும் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தது ஏ வி எம் நிறுவனமே .
1980களில் சின்னத்திரை தொடர்கள் புகழ் பெறத் துவங்கியபோது அதிலும் இறங்கிய ஏ வி எம் நிறுவனம் தூர்தர்ஷனில் ஒரு மனிதனின் கதை, ஒரு பெண்ணின் கதை , சன் தொலைக் காட்சியில் சொந்தம், வாழ்க்கை, நம்பிக்கை , சொர்க்கம், நிம்மதி உங்கள் சாய்ஸ், மங்கையர் சாய்ஸ் , ஜெயா தொலைக்காட்சியில் மனதில் உறுதி வேண்டும் , ராஜ் தொலைக்காட்சியில் சவாலே சமாளி, கலைஞர் தொலைக்காட்சியில் வைர நெஞ்சம் , உறவுக்கு கை கொடுப்போம், மங்கையர் உலகம் , வைராக்கியம் ஆகிய தொடர்களை தந்தது . இப்போது மோகினி என்ற தொடர் சுமார் 1400 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருகிறது.
ஓர் இரவு படத்தில் அறிஞர் அண்ணா, பரசாக்தியில் கலைஞர் கருணாநிதி, அன்பே வா படத்தில் எம் ஜிஆர் , மேஜர் சந்திரகாந்த், அநாதை ஆனந்தன் , எங்க மாமா ஆகிய படங்களில் ஜெயலலிதா, பூகைலாஸ் , ராமு ,சிட்டி செல்லுலு, சங்கம் , பக்தி மகிமா ஆகிய படங்களில் என் டி ராமராவ்…… இப்படி ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய ஒரே சினிமா நிறுவனம் ஏ வி எம் நிறுவனம்தான்.
இந்தியில் ராஜ்கபூர், சுனில்தத் , அசோக்குமார், நர்கீஸ், மீனாகுமாரி,தர்மேந்திரா , ஜிதேந்திரா, தெலுங்கில் நாகேஸ்வரராவ் , கிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த இந்த நிறுவனம் ரஜினிக்கு முரட்டுக்காளை முதல் சிவாஜி 3டி வரை , கமல்ஹாசனுக்கு சகலகலாவல்லவன் முதல் பேர் சொல்லும் பிள்ளை வரை பல படங்களை தொடர்ந்து தயாரித்ததோடு அஜீத், சூர்யா நடித்த படங்களையும் தயாரித்துள்ளது .
சினிமாவின் அடுத்த வாகனம் இணையம்தான் என்பதை உணர்ந்து இணையத்துக்கு என்றே, ‘இதுவும் கடந்து போகும்’ என்ற டெலிபிலிம் ஒன்றையும் எடுத்து வெளியிட்டது.
சிவாஜி அவரது மகன் பிரபு, சிவகுமார் அவரது மகன் சூர்யா , குமாரி ருக்மணி, அவரது மகள் லட்சுமி அவரது மகள் ஐஸ்வர்யா என்று தலைமுறைகளாகத் தொடரும் நடிகர்களை வைத்து படம் தயாரித்து இருக்கும் ஏ வி எம் நிறுவனத்தை உருவாக்கி வளர்த்த ஏ வி மெய்யப்பனின் தொண்டினை பாராட்டி மத்திய அரசு 2006 ஆம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது . தென்னிந்திய வர்த்தக சபை சிலை நிறுவியது.
ஏ வி எம் நிறுவனம் இன்று எழுபத்திஒன்றும் ஆண்டி அடியெடுத்து வைத்து, தனது கலைப் பயணத்தை நான்காவது தலைமுறையி
லும் தொடர்கிறது.

 

புதுக்கோட்டை செய்திகள்

Leave a Reply