• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் வருடாந்த இரதோற்சவம்

கனடா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானத்தில் வர்ண பகவான் மழைத் தீர்த்தத்தை தேரின் மீதும் பக்தர்கள் மீதும் பொழியப் பொழிய பக்தி அலைகளோடு நடைபெற்ற வருடாந்த இரதோற்சவம்

இன்று அதிகாலை தொடக்கம் நடைபெற்ற விசேட பூசைகள் மற்றும் அபிசேகங்கள் நிறைவுள்ள பின்னர் ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானத்தில் இரதோற்சம் நடைபெறும் நேரம் வந்தது.

அப்போது  வர்ண பகவான் மழைத் தீர்த்தத்தை  வானிலிருந்து பொழிந்து கொண்டிருந்தான்.  ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் மற்றும் சிவாச்சாரியப் பெருமக்கள் மற்றும் இரதோற்சவ உபயகாரரான கணேசன் சுகுமார் அவர்கள் அனைவரதும் முடிவிற்கு ஏற்ப தேர் நகரத் தொடங்கியது.

தொடர்ந்து தேரின் மீதும் பக்தர்கள் மீதும் பொழியப் பொழிய பக்தி அலைகளோடு நடைபெற்ற வருடாந்த இரதோற்சவம் தேர் மீண்டும் வாசலுக்கு வரும் வரையும் பக்தர் நனைந்த வண்ணம் பக்தி மேம்பட்டவர்களாய் 'அரோகரா!  'அரோகரா' என்று பக்தி உணர்வோடு உச்சரிக்க தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய இரதோற்சவத்திற்கு சிறப்பு விருந்தினராக ரொறன்ரோ மாநகரின் மேயர் கௌரவ ஒலிவியா சோ அவர்கள் வருகை தந்திருந்தார். அவரோடு பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர்.

படங்களும் செய்தியும்:- சத்தியன்

Leave a Reply