• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் பணிப்பு

இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டறியும் விஜயத்தை கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈடுபட்டிருந்தார்.

50 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் உள்ளுர் ஒப்பந்த நிறுவனம் ஒன்றினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த புதிய கட்டையார் பாலம் 25 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமும் கொண்டது.

நிர்மாணப் பணிகளை விரைவாக நிறைவு செய்து பொதுமக்களின் போக்குவரத்திற்காக பாலத்தை திறந்து வைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண அலுவலக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply