• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாரடைப்பில் மனைவி இறந்ததாக கூறிய கணவன்..அறிக்கையில் அம்பலமான கொலை நாடகம்

இந்திய நகர் மும்பையில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.

மும்பை வடலாவைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ் (32), ரோஷிணி. கடந்த 27ஆம் திகதி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ரோஷிணி மாரடைப்பில் உயிரிழந்ததாக ராஜேஷ் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த சகோதரர்கள் வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், ரோஷிணியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பொலிஸாரிடம் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளனர்.

அவர்களின் புகாரின் அடிப்படையில் ரோஷிணியின் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் ரோஷிணியின் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிய வந்தது.

உடனடியாக ராஜேஷை பிடித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜேஷை கைது செய்த பொலிஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  

Leave a Reply