சென்னையை தாக்கிய கடும் புயல் காரணமாக நவம்பர் 3ம் திகதிய இளையராஜா குழுவினரின் இசைநிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விரைவில் இன்னுமொரு திகதியில் இசைஞானியின் ரசிகர்களை றோஜர் சென்றரில் மாபெரும் நிகழ்ச்சியில் சந்திப்போம்.ஊடகங்கள் ஊடாக Trinity Events அமைப்பாளர்கள் டான்டன் பீற்றர்,கிசான் நித்தி இணைந்து அறிவிப்பு.
(ரொரென்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
வட அமெரிக்கா வாழ் இளையராஜாவின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்;திருந்த இசைஞானியின் நவம்பர் 3ம் திகதிய மாபெரும் இசைநிகழ்ச்சி சென்னையை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒத்த்pவைக்கப்பட்டுள்ளது. மிகவும் பொருட்செலவில் பல மாதங்களாக நாங்கள் செலவு செய்த நேரம் மற்றும் அனைத்து வளங்களும் வீண் போகாத வண்ணம் விரைவில் இன்னுமொரு திகதியில் இசைஞானியின் ரசிகர்களை சந்திப்போம்.அவர்களை இசை மூலம் மகிழ்விப்போம். ஏற்கெனவே அனுமதிச் சீட்டுக்கள் வாங்கியவர்கள் தங்களிடமுள்ள சீட்டுக்களை பாவித்து புதிய திகதியில் இசைநிகழ்;ச்சியை ரசிக்க வரமுடியும். இதேவேளை அனுமதிச்சீட்டுக்;களை திரும்பவும் ஒப்படைத்து பணம் பெற விரும்புகின்ற ரசிகர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
இவ்வாறு நேற்று மாலை ஸ்காபுறோ அஞ்சப்பர் செட்டிநாட் உணவகத்தில் நடைபெற்ற கனடிய தமிழ் ஊடகங்களுடனான சந்த்p;;ப்பில் வுசinவைல நுஎநவெள நிறுவன அமைப்பாளர்கள் டான்டன் பீற்றர் மற்றும் கிசான் நித்தி ஆகியோர் தெரிவித்தனர். கடந்த பல மாதங்களாக இளையராஜாவின் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்காக 20க்கும் மேற்படி உதவியாளர்களோடு இரவு பகலாக கண்விழி;த்து பணியாற்றிய சோர்வு ஒருபக்கம் அவர்களில் சற்று காணப்பட்டாலும், ஊடகங்களின் பிரதிநிதிகளோடு டான்டனும் கிசானும் மிகுந்த உற்சாகத்தோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
“எமது நிகழ்ச்சியை நவம்பர் 3ம் திகதி வெற்றிகரமாக நடத்துவதற்கு நாம் எம்மால் முடிந்தளவிலும் பார்;க்க அதிகமாக உழைத்தோம். ஆனால் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு மற்றுமொரு விமானத்த்pல் மாறி இங்கு வரும் பிரயாண ஏற்பாடுகள் அனைத்தும் சென்னையில் வீசிய கடும் புயலினால் சீர்குலைந்து விட்டன. எமது சக்;திக்கும் இசைஞானி இளையராஜா குழுவினரின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் இந்த இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து விட்டது. எனவே இந்த நிகழ்;ச்சியை நாம் இன்னுமொரு திகதியில் நடத்த வேண்டி ஏற்பட்டுவிட்டது. எனவே எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் இசைஞானியின் இந்த வெற்றிகரமான இசை நிகழ்;ச்சி நாங்கள் தி;ட்டமிட்ட வகையில் அதே றோஜர்ஸ் சென்றரில் நடைபெறும். முன்னர் திட்டம்pட்ட முறையிலும் இன்னும் சிறப்பாக இசைஞானியின் இசை நிகழ்;ச்சி விரைவில் நடைபெறும். இயற்கையின் அனர்த்தத்தால் ஒத்தி;வைக்கப்பட வேண்டிய நிலையில் எமது நிறுவனம் சில லட்சங்கள் டாலர்களை நஸ்டமடைய வேண்டி இருந்தாலும், இசைஞானியின் ஆர்;வம் அதிகமுள்ள ரசிகர்களை நாங்கள் மிக விரைவில் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம். எனவே அனைவரும் சில தினங்கள் எமது அறிவிப்பிற்காக பொறுத்திருக்குமாறு அன்புடன் கேட்டுக்;கொள்கின்றோம்.. மேலதிக விபரங்களுக்கு எமது மின்னஞ்சலான media@trinityeventsonline.com என்னும் விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்.

