விடுதலைப் புலிகளை யுத்தரீதியாக நான் வெற்றிகொண்ட பின்னர் கூட அதற்காக அங்கிகாரம் எனக்கு கிடைக்கவில்லை என்று, மகிந்தர் மனம் நொந்துள்ளாராம். 2009ம் செப்டெம்பர் மாதம் 24ம் திகதி இது தொடர்பான செய்தி ஒன்றை பாதுகாப்பான கேபிள் மூலம், அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு அனுப்பியுள்ளது. மேற்குறிப்பிட்ட மாதத்தில் ரொபேட் ஓ பிளேக் மகிந்தரைச் சந்தித்துள்ளார்.
தாம் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு விட்டதாகவும், இதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனக்கு நல்ல மரியாதை கிடைக்கும் என்று தான் நம்பியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் தனக்கு நல்லதொரு அங்கிகாரம் கிடைக்கும் என தான் நம்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்வதேசத்திலும் சரி உள்நாட்டிலும் சரி, தான் நினைத்த அளவு தனக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று மகிந்தர் ரொபேட் ஓ பிளேக்கிடம் மனம் நொந்துள்ளார். இதனை ரொபேட் ஓ பிளேக் அவர்கள் தனது தலைமைக்கு அனுப்ப இச் செய்தியை விக்கி லீக்ஸ் கைப்பற்றி தனது தரவுத் தளத்தில் ஏற்றியுள்ளது.