Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home роЗродрпИ роОройродрпБ роорпБродро▓рпН рокроХрпНроХрооро╛роХрпНроХрпБ родрооро┐ро┤ройрпН ро╡ро┤ро┐роХро╛роЯрпНроЯро┐ INFORMATION PAGE
 
 

 

 
யாழில் பாகிஸ்தான் வேவுதளம்: ஊடகவியலாнளரின் கேள்விக்கு பதிலளிக்காது மழுப்பினார் ஹெகலிய
Saturday 15th of September 2012 12:39:24 PM

 

பாகிஸ்தான் புலனாய்வுத்­துறை யாழ்ப்பாணத்தில் அவ­தானிப்பு நிலையமொன்றை நிறுவியுள்ளது என இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி  தொடர்பில் எழுப்பப்­பட்ட கேள்விக்கு மழுப்பல் போக்­கில் பதிலளித்துள்ள இலங்கை அரசு, தமிழ­கத்துக்­கான பயண எச்சரிக்கை விரை­வில் தளர்த்­தப்படும் என்றும் கூறியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியா­ளர் மாநாடு  அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது, 
"பாகிஸ்தான் புலனாய்வுத்­துறை யாழ்ப்பாணத்தில் அவ­தானிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்­டுள்ளன. எனவே, இது குறித்து அரசின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?'' என ஊடகவியலா­ளர் ஒருவர் அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வியெழுப்பினார்.

"இது பாதுகாப்பு சார்ந்த விடயமாகும்; உடன் பதிலளிக்க­முடியாதுள்ளது. எனினும், நாம் அனைத்து நாடுகளுடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றோம் என்ற விடயத்தைத் தற்போது குறிப்பிடமுடியும்'' என அமைச்சர் பதிலளித்தார்.

இலங்கைப் பிரஜைகளுக்குத் தமிழகத்துக்குச் செல்லவேண்டாமென விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை இன்னும் அமுலிலுள்ளதா என்ற கேள்விக்கு, "ஆம். தடையைத் தளர்த்தும் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். எப்படியிருப்பினும், விரைவில் பயணத்தடை நீக்கப்படும்''  என்று அமைச்சர் கெஹலிய பதிலளித்தார். 

 

 

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark