அமெரிக்க இராதஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்று விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
றோபேட் ஓ பிளேக் தலைமையிலான அமெரிக்கக் குழு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போன்றோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய காலமே சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ள போதிலும், இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் றோபேட் ஓ பிளேக் ஆர்வம் கொண்டுள்ளதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.